கவரப்பேட்டை கோர விபத்து... ரயில்வே ஊழியர்களிடம் இன்று விசாரணை

by Staff / 12-10-2024 04:42:49pm
கவரப்பேட்டை கோர விபத்து... ரயில்வே ஊழியர்களிடம் இன்று விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் காயமடைந்தனர். இதனிடையே விபத்து தொடர்பான விசாரணைக்கு கவரப்பேட்டை ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், சிக்னல் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் இன்று(அக்.12) மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via