ஓடும் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவரின் கால்கள் ரயில் சக்கரம் ஏறியதில் நசுங்கியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா தாமஸ் (18 )
திருச்சி அருகேயுள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் படித்து வருகிறார்.இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக வையம்பட்டி இரயில் நிலையத்தில் ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த போது, நடைமேடைக்கும் இரயிலுக்கும் இடையே இரண்டு கால்களும் சிக்கிக் கொண்டு நசுங்கியது. காயம்பட்ட மாணவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து திருச்சி இரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவரின் கால்கள் ரயில் சக்கரம் ஏறியதில் நசுங்கியது.