அரக்கோணம்-சென்னை விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலாய் நிறுத்திய பணிகள்

by Editor / 22-11-2024 02:27:24pm
 அரக்கோணம்-சென்னை விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலாய் நிறுத்திய பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் காலை 6 மணி 40 நிமிடங்கள் அளவில் விரைவு மின்சார ரயிலானது இயக்கப்படுவது வழக்கம். இந்த மின்சார ரயில் அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். திருவள்ளூரில் இருந்து விரைவு ரயிலாக புறப்பட்டு எட்டு மணி பத்து நிமிடங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைவைத்து வழக்கமாக இருந்துவரும் நிலையில் 

இன்று காலை  இந்த ரயில் வழக்கம் போல் இன்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கும் போது அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் மற்றும் மோசூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தாமல் ரயில் ஓட்டுனர் ரயிலை இயக்கியுள்ளார்.  ரயில் நடைமேடைகளில் நிற்காமல் சென்றதைக் கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து  உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை இயக்கிய ஓட்டுனர் மற்றும் கார்டு ஆகிய இருவரையும் ரயில்வே நிர்வாகம் மாற்றி வேறொரு ஓட்டுனர் மற்றும் கார்டை நியமித்து ரயிலானது திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.  இதனால் ரயில் பயணங்களில் பெரும் அச்சம் ஏற்படுத்துவது இதனிடையே கவனக்குறைவாக ரயில் இயக்கிய ஓட்டுனர் மற்றும் கார்டு ஆகியோரிடம் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை 

 

Tags :  அரக்கோணம்-சென்னை விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலாய் நிறுத்திய பணிகள்

Share via

More stories

Logo