சிவகிரியில் இரவில் வீடு புகுந்து பெண் குத்தி  கொலை.

by Editor / 31-12-2024 10:33:17am
சிவகிரியில் இரவில் வீடு புகுந்து பெண் குத்தி  கொலை.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் ராமேஸ்வரன் இவரது மனைவி பாஞ்சாலி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர், நேற்றிரவு பாஞ்சாலி மற்றும் வீட்டில் தனியாக இருந்தார் அப்பொழுது வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஞ்சாலியை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார், சம்பவ இடத்திலேயே பாஞ்சாலி உயிரிழந்தார், சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கி குற்றவாளியை உடனடியாக கைது செய்தனர்.இருவரும் வெவ்வேறு பிரிவைச்சார்ந்தவர்கள்  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : சிவகிரியில் இரவில் வீடு புகுந்து பெண் குத்தி  கொலை.... 

Share via