மாணவர்களின் கல்வியோடு விளையாடும் பாஜக – கனிமொழி எம்.பி. கண்டனம்.

by Editor / 16-02-2025 04:16:31pm
மாணவர்களின் கல்வியோடு விளையாடும் பாஜக  – கனிமொழி எம்.பி. கண்டனம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான்,  கல்விக்கான நிதி விடுவிக்கப்படும்  என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?

அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.

இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்‌.என  திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags : மாணவர்களின் கல்வியோடு விளையாடும் பாஜக – கனிமொழி எம்.பி. கண்டனம்.

Share via

More stories

Logo