பட்டாசு வெடித்து 40 பேர் படுகாயம்

by Staff / 19-02-2025 04:57:02pm
பட்டாசு வெடித்து 40 பேர் படுகாயம்


கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு, தேரட்டம்மலில் நடந்த செவன்ஸ் கால்பந்து போட்டியின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்து மைதானத்திற்குள் வெடித்து பார்வையாளர்கள் மேல் விழுந்தது. அலறியடித்து ஓடிய பார்வையாளர்கள் மீது பட்டாசு வெடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via