மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளுக்கான திரைப்படத்தின் பெயரில் பள்ளிகளில் வசூல் வேட்டை:  

by Editor / 12-03-2025 09:46:42pm
மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளுக்கான திரைப்படத்தின் பெயரில் பள்ளிகளில் வசூல் வேட்டை:  

குமரி மாவட்டதில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு குறும்படம் போட்டு மாணவர்களுக்கு காண்பிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு தந்திருப்பதாக  தெரிவித்து மாவட்ட ஆட்சியரின் போலியான கையொப்பமிட்டும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியின் சீலையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தியும் அனைத்து பள்ளிகளுக்கும் போலி லெட்டரை அனுப்பி மாணவர்களிடம் இருந்து ரூபாய் 10 வசூல் செய்து பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்த  குற்றவாளிகளில் ஒருவர் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 கைது செய்யப்பட்ட  நபரிடம் மாவட்ட ஆட்சியரின் போலியான கையெழுத்துடன் கூடிய லெட்டரை தயார் செய்து  பத்து ரூபாய் முறை கேட்டில் யார் யார்?  சம்பந்தப்பட்டுள்ளனர் , எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது. போலியான ஆவணம் மற்றும் சீல்  எங்கு தயார் செய்யப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல நாட்கள் மர்மமாக இருந்து வந்த ஆட்சியரின் போலி கையெழுத்து மற்றும் பத்து ரூபாய் பள்ளி கொள்ளை வழக்கு தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. எனவே இதில் தொடர்புடைய பசுந்தோல் போர்த்திய புலிகள் விரைவில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : போலி ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளுக்கான திரைப்படத்தின் பெயரில் பள்ளிகளில் வசூல் வேட்டை:  

Share via