போக்சோ வழக்கில் சிக்கிய  குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை

by Editor / 15-03-2025 09:52:53am
  போக்சோ வழக்கில் சிக்கிய  குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த  மாரிமுத்து (45) என்பவரை  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று ( மார்ச் 14 ) தீர்ப்பளித்தார். இதில், குற்றவாளியான மாரிமுத்துக்கு  5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  வனிதா அவர்களையும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி விசாரணைக்கு உதவியாக இருந்த  பெண் தலைமை காவலர்  ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.

 

Tags : தூத்துக்குடியில்  போக்சோ வழக்கில் சிக்கிய  குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை

Share via