தேன் குளவி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம். தீயிட்டு கொளுத்தி கூட்டை அகற்றிய தீயணைப்புத் துறையினர்

by Editor / 31-07-2024 12:20:19am
தேன் குளவி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம். தீயிட்டு கொளுத்தி கூட்டை  அகற்றிய தீயணைப்புத் துறையினர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே படர்ந்த புளி - தோணுகால் இடையே ஆழ்வார்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த தேன் குளவி கூட்டில் இருந்த குளவிகள் கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தோட்டத்தின் உரிமையாளர் ஆழ்வார்சாமியையும் தேன் குளவிகள் பதம் பார்த்துள்ளது. இதில் காயமடைந்த ஆழ்வார் சாமி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தேன் குளவி கூடை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு ஆழ்வார் சாமி தோட்டத்திற்கு சென்று தீயிட்டு தேன் குளவி கூடை அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரும் மூச்சு அடைந்துள்ளனர்.

 

Tags : தேன் குளவி கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம்.

Share via