மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

by Editor / 25-03-2025 04:01:17pm
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோவை சென்னாலூர் மேற்கு வீதியை சேர்ந்த ஆறுசாமி (வயது 59) என்பவர் ரங்கராஜ் என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தோட்டத்து மின்வேலியை எதிர்பாராத விதமாக தொட்டபோது, மின்வேலியில் கொடுக்கப்பட்டிருந்த மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். தோட்டத்தின் பாதுகாப்புக்காக போட்டிருந்த மின்வேலியில் பேட்டரி மின்சாரத்திற்கு பதிலாக நேரடியாக மின்சாரம் கொடுக்கப்பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மனைவி பிரேமாவத்சலா கொடுத்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தோட்ட உரிமையாளர் ரங்கராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via