தென்காசி, செங்கோட்டை இடையே 4 ரயில் சேவைகள் பகுதி தூரமாக ரத்து.

by Editor / 30-03-2025 09:40:17am
தென்காசி, செங்கோட்டை இடையே 4 ரயில் சேவைகள் பகுதி தூரமாக ரத்து.

 தென்காசி - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை கீழ்க்கண்ட ரயில் சேவைகள் பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 அதன்படி, மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலானது தென்காசி - செங்கோட்டை இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு, மதுரை தென்காசி இடையே மட்டும் இயக்கப்படும்.

 அதேபோல், செங்கோட்டை - மதுரை இடையே மதியம் 12.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலானது செங்கோட்டை- தென்காசி இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு தென்காசியில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.

மேலும், செங்கோட்டை- நெல்லை இடையே நாள்தோறும் மதியம் 2.05 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலானது செங்கோட்டை - தென்காசி இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு தென்காசியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும்.

அதேபோல், நெல்லை - செங்கோட்டை இடையே காலை 9 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலானது தென்காசி - செங்கோட்டை இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு தென்காசியில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ரயில் சேவை மாற்றமானது வாரத்திற்கு 6 நாட்கள் அமலில் இருக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறாது என்பதால் அன்றைய தினம் வழக்கம்போல் ரயில்கள் மதுரை செங்கோட்டை இடையேவும்,  நெல்லை - செங்கோட்டை இடையேவும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தென்காசி, செங்கோட்டை இடையே 4 ரயில் சேவைகள் பகுதி தூரமாக ரத்து.

Share via