"மெக்சிகோவில் கிரேஸ் சூறாவளி!".. 8 பேர் பலி

by Editor / 22-08-2021 05:34:57pm

மெக்ஸிகோவின் கிழக்கு பகுதியில் கிரேஸ் சூறாவளியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியுள்ளது.மேலும் வெராகுரூஸ் என்ற பகுதியில் 20-க்கும் அதிகமான நகராட்சி பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியால் 8 நபர்கள் பலியானதோடு, மூவர், மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளும், சாலைகளும் சேதமடைந்திருக்கிறது. சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டிருக்கிறது. தற்போது, காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via