போதைப்பொருள் கடத்தல் - ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்

சென்னை: போதைப்பொருள் கடத்தியதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜாபர் சாதிக், ஆகஸ்ட் மாதம் அவரது சகோதரர் முகமது சலீம் கைது செய்யப்பட்டனர். மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக வைத்து ஜாமின் வழங்கப்படுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.
Tags :