மகனுக்கு எமனாக வந்த அப்பாவின் புகைப்பழக்கம்

by Editor / 18-06-2025 04:31:14pm
மகனுக்கு எமனாக வந்த அப்பாவின் புகைப்பழக்கம்

அப்பா குடித்துப் போட்ட பீடியை விழுங்கிய 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. பீகாரை சேர்ந்த லட்சுமி தேவி என்பவர் தனது கணவருடன் மங்களூருவில் வசித்து வந்துள்ளார். புகைப்பழக்கத்திற்கு அடிமையான அவரது கணவர், புகைத்துவிட்டு பீடி துண்டுகளை வீட்டிற்குள் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டிலிருந்த பீடி துண்டை குழந்தை விழுங்கியதை பார்த்த லட்சுமி மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். இருப்பினும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

Tags :

Share via