சாலை விபத்து- தமிழக அரசு பெண் அதிகாரி பலி

திருச்சி: முசிறி வருவாய் கோட்டாச்சியர் ஆரமுது தேவசேனா (52), திருச்சி நோக்கி தனது அரசு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து உரசியதால், கட்டுப்பாட்டை இழந்த ஆர்டிஓ-வின் வாகனம் சாலையோரம் நின்றிருந்த ஜேசிபி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தேவசேனா உடல் நசுங்கி உயிரிழந்தார். ஓட்டுனர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்துகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :