2 குழந்தைகள் கொலை.. தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு

by Editor / 24-07-2025 01:16:15pm
2 குழந்தைகள் கொலை.. தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியும், அவர் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ல் தனது 2 குழந்தைகளான அஜய் (6), கார்னிகா (4) ஆகியோரை கொன்றார் அபிராமி. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தந்து கொலை செய்தார். இந்த சம்பவம் அப்போது தமிழ்நாட்டையே உலுக்கியது.இந்தநிலையில்  அபிராமியும், அவர் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via