ரயில் குண்டுவெடிப்பு வழக்கில்12 பேரை விடுதலை செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

by Editor / 24-07-2025 01:07:25pm
ரயில் குண்டுவெடிப்பு வழக்கில்12 பேரை விடுதலை செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் நடந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை விடுதலை செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த வாரம் 12 பேரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 12 பேரையும் சிறையில் இருந்து விடுவிப்பதை இந்த உத்தரவு பாதிக்காது. உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via