காருக்குள் இறந்து கிடந்த நபர்கள்.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

by Editor / 04-08-2025 05:41:16pm
காருக்குள் இறந்து கிடந்த நபர்கள்.. அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் காருக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்தவர்கள் சச்சின் சர்மா (27) மற்றும் லக்ஷ்மி ஷங்கர் (50) என்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் காஜியாபாத் பகுதியை சேர்ந்த நண்பர்களாக கூறப்படுகிறது. அவரது உடல்களில் எந்தவித காயங்களும் இல்லை என்றும், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via