ஓணம் பண்டிகை பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது.
ஓணம் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. நாளை (செப் 5) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கேரளா பூ வியாபாரிகள் தமிழக எல்லையில் இருந்து பூக்களை பெருமளவில் வாங்கிச் செல்கின்றனர். இதன்காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூக்கள் விலையும் ரூ.50 முதல் ரூ.300 வரை உயர்ந்து விற்பனையாகிறது. சம்பங்கி ரூ.300, ஸ்டம்ப் றோஸ் ரூ.400, அரளி பூ ரூ.250, செவ்வந்தி ரூ.250க்கு விற்பனையாகிறது.
Tags : ஓணம் பண்டிகை பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது.



















