சாதிவாாி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு..க..ஸ்டாலின் வரவேற்பு
மத்திய அரசு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்பையும் சேர்ந்த நடத்த முடிவெடுத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரவேற்று கடிதம் எழுதி உள்ளார்.. அவர் தம் கடிதத்தில், ஜாதி வாரி விவரங்களை சேகரிப்பது சமூகநீதி மற்றும் சமத்துவ கொள்கை வகுப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் வரவேற்று, கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வினா பட்டியலை இறுதி செய்யும் முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஒன்றிய ஆளுநர்களுடன் கலந்து ஆலோசிக்க ஒர். ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ஜாதிவாதி கணக்கெடுப்பு என்பது மிகவும் உணர்வு பூர்வமான விஷயம் என்பதால் கேள்விகள் மற்றும் உட்பிரிவுகளை வடிவமைப்பதில் மிகுந்த துல்லியமும் தேவைப்பட்டால் முன்னோடி திட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இது தமிழக அரசின் நீண்ட கால கோரிக்கை என்றும் இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றபட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
Tags :



















