காட்டு யானைகளின் அட்டகாசம்.. மின் கம்பங்கள் சேதம்

by Editor / 06-09-2021 09:44:16am
காட்டு யானைகளின் அட்டகாசம்.. மின் கம்பங்கள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டபுள்கான்தொட்டி கிராமத்தில் சுற்றித்திரியும் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் யானைகள் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடிங்கி எரிந்ததோடு, அங்கிருந்த 2 மின் கம்பங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் மின்சாரம் தடைபட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி விட்டன.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை நட்டு சீரமைத்துள்ளனர். அதன் பிறகே அப்பகுதியில் மின் விநியோகம் சீரானது.

 

Tags :

Share via