அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணியின் சாயப்பட்டறை மின் இணைப்பு துண்டிப்பு
நாமக்கல் பள்ளிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளின் செயல்பாடுகளை செவ்வாய்க்கிழமை இரவு பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, பிரச்னைக்குரிய சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மதுபாலனுக்கு அமைச்சர் ராஜீவ் உத்தரவிட்டார். அதனடிப்படையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :


















