குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

by Editor / 10-09-2021 07:43:49pm
குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கள்ளூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். தாயார் மீனாட்சி. லோகேஸ்வரன் மாமியார் திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே கடம்பூரில் வசித்து வருகிறார்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அவரும், மனைவி மற்றும் 4 ம் வகுப்பு படிக்கும் மகன் ஐஸ்வந்த், 2 ம் வகுப்பு படிக்கும் மகள் ஹரி பிரீத்தா ஆகியோருடன் மாமியார் வீட்டுக்கு வந்தார்.இன்று காலை மாமியார் வீட்டில் குடும்பத்தினரோடு விநாயகர் வழிபாடு செய்தனர். மதியம் 2:00 மணிக்கு ஆம்பூர் அருகே கைலாசகிரி மலைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அதை லோகேஸ்வரனும் அவர் மனைவியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீரில் இறங்கிய ஐஸ்வந்த், ஹரி பிரீத்தா ஆகியோர் திடிரென நீரில் மூழ்கினர். ஆம்பூர் தீயணைக்கும் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி இருவரின் உயிர் அற்ற உடலை மீட்டனர்.தாய், தந்தை கண் எதிரில் இரு குழந்தைகளும் இறந்ததை பார்த்து கதறி அழுதனர். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கைலாசகிரி மலையில் உள்ள குளம் அதிக ஆழம் உள்ளது. சேரும், சகதியும் நிறைந்த அங்கு புதை குழிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்டவர்கள் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழகி இறந்துள்ளனர்.100 க்கும் மேற்பட்ட கால் நடைகள் இறந்துள்ளன

 

Tags :

Share via