இந்தியாவில் புதிதாக 22,842 பேருக்கு கொரோனா

by Editor / 03-10-2021 05:17:54pm
இந்தியாவில் புதிதாக 22,842 பேருக்கு கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

புதிதாக 22,842 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதில், கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,842 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் இதுவரை 3 கோடியே 38 லட்சத்து 13 ஆயிரத்து 903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 25,930 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 94 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 199 நாட்களில் இல்லாத அளவாக சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 557 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 90 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரத்து 348 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 லட்சத்து 76 ஆயிரத்து 846 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via