கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அணுக்கழிவு மையம்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

by Editor / 03-10-2021 05:40:18pm
கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அணுக்கழிவு மையம்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில், தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகின்றன. 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்க கட்டுமான பணியானது கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியானது 2023- 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகளில் உள்ள கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைக்குமாறு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளன. அதனால் அணுசக்திக்கு எதிராக போராட்ட குழு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via