துண்டுகளாக வெட்டி யானையின் உடல் புதைப்பு

by Editor / 05-10-2021 09:30:30am
துண்டுகளாக வெட்டி யானையின் உடல் புதைப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மழவன் சேரம்பாடி பகுதி. இந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த 2ம் தேதி அந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் பிளிரும் சத்தம் கேட்டது. அச்சமடைந்த மக்கள் காட்டுக்குள் சென்று பார்க்கையில், 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கிய நிலையில் இருந்துள்ளது.

சுற்றிலும் நான்கு யானைகள் நின்று பிளிறி கொண்டிருந்தன. யானையை மீட்க வனத்துறையினர் வந்த போது தாய் யானையை வனத்துறையினர் நோக்கி வந்ததால் வனத்துறையினர் பின்வாங்கினர்.குட்டி யானையை நெருங்கவிடாமல் நான்கு யானைகளும் சுற்றி நின்று பாசப் போராட்டம் நடத்தியது. ஆனால், குட்டி யானை ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையிலும் சுற்றிலும் யானைகள் இருந்ததால் வனத்துறையினரால் அதன் சடலத்தை மீட்க முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. வனத்துறையினர் குட்டி யானையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்தனர். அங்கேயே புதைப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர் ஆனால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறுவழியின்றி குட்டி யானையின் உடலை 10 துண்டுகளாக வெட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று புதைத்தனர்.

 

Tags :

Share via