ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சித்  தலைவர்

by Editor / 12-10-2021 04:41:24pm
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சித்  தலைவர்


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் டி. ரமேஸ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தார். நெஞ்சுவலியால் அண்மையில் ரமேஸ்குமார் உயிரிழந்தார். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.


மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும், 5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவானது.இதில் கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார்.

 

Tags :

Share via