குளிர்பானம் குடித்ததால் மரணமில்லை: பாலியல் தொந்தரவால் தாயும் மகளும் பலி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

by Editor / 16-10-2021 03:51:42pm
 குளிர்பானம் குடித்ததால் மரணமில்லை: பாலியல் தொந்தரவால் தாயும் மகளும் பலி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால் தாயும், மகளும் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம். இவர்களது மகள் தர்ஷினி. இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் பின்பாக குளிர்பானம் குடித்த போது திடீரென மயங்கி விழுந்த அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


இந்நிலையில், இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், உயிரிழந்த கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்பொழுது கற்பகம் மற்றும் அவர்கள் மகள் தர்ஷினி உயிரிழப்புக்கு சிக்கன் கிரேவியோ குளிர்பானமோ காரணமில்லை என தெரியவந்துள்ளது.மேலும், அவரது வீட்டின் அருகே உள்ள வீரப்பெருமாள் எனும் நபருடன் கற்பகம் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின் வீரப்பெருமாளுடன் பேசுவதை கற்பகம் தவிர்த்து வந்ததால் அவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.


மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை குடும்பத்தினரிடம் காட்டி விடுவேன் என்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் தனது குடும்பம் அவமானப்பட்டு விடும் என்று கருதிய கற்பகம், தான் சாப்பிட்ட சாப்பாடு அல்லது குளிர் பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.எனவே தற்போது போலீஸார் கற்பகத்தின் அண்டை வீட்டுக்காரர் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via