எம் பி .பதவியை ராஜினாமா செய்த பாஜக தலைவர் பாபுல் சுப்ரியோ

by Editor / 19-10-2021 04:11:55pm
எம் பி .பதவியை ராஜினாமா செய்த பாஜக தலைவர் பாபுல் சுப்ரியோ


தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை பேரவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் வழங்கினார்.
2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பாபுல் சுப்ரியோ நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது பாபுல் சுப்ரியோவின் பதவி பறிக்கப்பட்டது. பல மாதங்களாக பாஜக மீது கோபமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


பின்னர், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் கட்சியில் முறையாக இணைந்தார். இந்நிலையில், தான் வகித்து வந்த எம்.பி பதவியை சுப்ரியோ ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை பேரவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் வழங்கினார்.

 

Tags :

Share via