ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டம்

by Editor / 09-11-2021 03:02:37pm
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டம்

 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசு உரிமையை விட்டு கொடுத்துவிட்டதாக கூறி, தேனியில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
 
கேரளாவில் உள்ள முல்லைப்பெரியாறு அணையிலிருந்து அண்மையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்நிகழ்வில் கேரளா அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.  ஆனால் அணையிலிருந்து திடீரென நீர் திறந்து விடப்பட்டதற்கும், கேரளா அமைச்சர்கள் பங்கேற்றதற்கும் அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசு உரிமையை அடகு வைத்ததாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம்,  5 மாவட்ட மக்களின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் நீரை தமிழக அரசு தாரை வார்த்திருப்பது கண்டனத்திற்குரியது என குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது மாநில உரிமையை பறிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில்  போராட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via