அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது

by Editor / 19-11-2021 03:56:41pm
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா   கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி 
ஸ்தலமாகவும் விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ள 
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் 
10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும், இந்த ஆண்டு தீபத் திருவிழா 
கடந்த 10 ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது, பத்து நாட்கள் 
நடைபெற்று வந்த விழாவின் 10 வது நாள் திருவிழா இன்று அதிகாலை சுவாமி அம்பாள் 
மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, பின்னர் 
அதிகாலை 03.20 மணிக்கு ஆலயத்தின் கருவரை முன்பு உள்ள பிரதோஷச நந்தி சிலை 
அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.மாவட்ட ஆட்சியர் 
பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி ஆகியோர் பங்கேற்பு, ஏராளமான பக்தர்கள் சுவாமி செய்தனர்.தரிசனம்...ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டது, பரணி தீப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா என்று சொல்லி 
வழிபட்டார்கள். பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை சிவாச்சாரியார் 
கையில் ஏந்தியவாறு திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து 
பக்தர்களுக்கு காட்சியளித்தனர், பின்னர் வைகுந்த வாயில் வழியாக மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை 
அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது, அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள 
விநாயகர், முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் 
மூல ஸ்தானத்தில் ஆராதனை காட்டப்பட்டது, பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா   கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது
 

Tags :

Share via