முகத்தில் தோன்றும் பருக்கல்,கரும்புள்ளிகள் மறைய....

by Editor / 22-11-2021 11:14:01pm
முகத்தில் தோன்றும் பருக்கல்,கரும்புள்ளிகள் மறைய....

சிறிய படிகாரத்தை தண்ணீரில் ஊற வைத்து,பின்பு தினமும் அந்த தண்ணீரில் முகம் கழுவி வந்தால் பருக்கல்,தழும்புகள் மறைந்து போகும்.

கறிவேப்பிலையை அரைத்து,பின்பு வெண்ணெயுடன் கலந்து முகத்தில்தடவி வந்தால் முகப்பரு விலகிவிடும்.
சின்ன வெங்காயத்தை பாலில் வேக வைத்து,பின்பு மை பதத்தில் அரைத்து பின்பு பருக்கல் மீது தடவி வந்தால்
பருக்கல் மெல்ல மெல்ல மறையும்.

கீழாநெல்லி,கொத்தமல்லி இவற்றின் இலைகளை பால் சேர்த்து நன்றாக மையாக அரைத்து  கரும்புள்ளி,தேமல் படர்ந்த தோல் பகுதிகளில் தடவி வந்தால் விரைவில் தோல் நோய் தீரும்.

 

Tags :

Share via