கார் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டு சென்ற ஆளுநர்

by Editor / 24-11-2021 11:53:38am
கார் மூலம்  கன்னியாகுமரி புறப்பட்டு சென்ற ஆளுநர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில்  இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குடும்பத்தினருடன்  வருகை தந்த  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போலீசார் அணிவகுப்பு வரவேற்பு மரியாதை ஏற்று கொண்டார். அதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் கார் மூலம்  கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.

 

Tags :

Share via