இருதரப்பு கற்களை வீசி தாக்குதல் காவல்துறை விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவரத்தி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் புதிதாக அம்பேத்கர் திருஉருவம் படம் வைத்து அஞ்சலி செலுத்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு. போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்த போது இருதரப்பினர் மோதல். ஒருவரை ஒருவர் கற்களால் வீசி தாக்குதல். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை.நடத்தி வருகின்றனர்.போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags :