13 வயது சிறுமியை திருமணம் செய்த அரசு பேரூந்து கண்டக்டர் கைது.

by Editor / 12-12-2021 01:21:48pm
13 வயது  சிறுமியை திருமணம் செய்த அரசு பேரூந்து கண்டக்டர் கைது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பனிமனை கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருபவர்  பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன். 
 
இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பரமேஸ்வரி தனது மூன்று மகள்களில் 13 வயது உடைய இளைய மகளுடன் ஓடிவந்து தனியாக  ராதாகிருஷ்ணனுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதியன்று 13 வயது சிறுமிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் பெரிய கருக்கை கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் வைத்து ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணி, கள்ளக்காதலி பரமேஸ்வரி ஆகியோர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்தநிலையில்  சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இது தெடர்பாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் காளத்தி சேகரனுக்கு தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து அவர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து அரசு பேரூந்து கண்டக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கள்ளக்காதலியும்,சிறுமியின் தாயாருமான பரமேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via