முன்னாள் அமைச்சர் தங்கமணி சொந்தமான தமிழகம்,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்சோதனை.

by Editor / 15-12-2021 08:03:15am
முன்னாள் அமைச்சர்  தங்கமணி சொந்தமான தமிழகம்,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட 69  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்சோதனை.

கடந்த அதிமுக ஆட்சியில்  அமைச்சர்களாக இருந்த  எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர்சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் வருமானத்திற்கு அதிகாமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி மற்றும் இவரது மனைவி சாந்தி,மகன் தரணீதரன் ஆகியோர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம்,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட  69  இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 14 இடங்களிலும் மற்றும் 9 மாவட்டங்களிலும்  சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via