சுட்டநகையை உருக்கி சுடுகாட்டில் பதுக்கியவன் கைது
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகையானது உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை காவல் துறையினர் தோண்டி எடுத்துள்ளனர்இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இவன்தங்கியிருந்த இடங்களில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்..மேலும் இந்த வழக்கில் இருவரை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags :