கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்த மனைவி... பரபரப்பு வாக்குமூலம்
சேலம் கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரியாவின் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பேரலில் துர்நாற்றம் வீசுவதை கண்டுபிடித்தனர். அதனை திறந்து பார்த்தபோது,சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
சந்தேகமடைந்த போலீசார் பிரியாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பிரியாவும், சேதுபதியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான சேதுபதி அடிக்கடி வேலைக்காக வெளியூர் சென்று வந்துள்ளார்.இதனால் பிரியாவுக்கும் பக்கத்து வீட்டு சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்புக்கு சேதுபதி இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்ததாக பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் பிரியா மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :