சென்னையில் மட்டும் இதுவரை ரூ.1.31 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

by Editor / 02-02-2022 03:39:09pm
சென்னையில் மட்டும் இதுவரை ரூ.1.31 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில்  சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதன் தொடர்ச்சியாக அனைத்துப்பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம்,பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடைசெய்யும் பொருட்டு தேர்தல் ஆணையத்தின் சார்பில் சென்னையில் இதுவரை ரூ.1.31 கோடி பணம், பொருட்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.26 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

Tags : Police order to hand over 22,000 firearms in Tamil Nadu

Share via