தீ விபத்து ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் சேதம்

by Admin / 04-02-2022 12:04:57pm
 தீ விபத்து  ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் சேதம்

திண்டுக்கல் - நத்தம் சாலையில் கோபால்பட்டியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் சென்று விட்டனர்.
 
நள்ளிரவு 1 மணியளவில் திடீரென கடைக்குள் இருந்து கரும்புகை வெளி வந்தது. அங்கு காவலுக்கு இருந்த வாட்ச்மேன் இதுகுறித்து உரிமையாளர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தார்.

சற்று நேரத்தில் புகை மூட்டம் அதிகரித்து கடையில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாணார்பட்டி போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது.

நத்தம் மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் கடையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது.

 

Tags :

Share via