வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து 6 பேர் சடலமாக மீட்பு
வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் நீரில் மூழ்கிய 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
காணாமல்போன 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் முழுவீச்சில் நடைபெறுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதியது சம்பவத்தில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
அருகில் இருந்தவர்களை பிடித்து சிலர் உயிர் தப்பிய நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்வதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :