திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று தேரோட்டம்

by Staff / 26-03-2022 02:23:19pm
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று  தேரோட்டம்

வைணவ திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த, ஆழ்வார்களால் போற்றி பாடப்பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், யோகநரசிம்மர் யோகநிலையில் மேற்கு நோக்கி நோய் தீர்க்கும் பெருமானாக எழுந்து அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் உள்ள யோக நரசிம்மரின் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இன்று காலையில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 மாடவீதிகளில் நரசிம்மர் சுவாமிதேர் வலம் வந்து 9 மணிக்கு நிலையை அடைந்தது. வருகிற 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி திருவல்லிக்கேணியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

Tags :

Share via