கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த நபர்கள் யார்..? என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் மீது ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.இந்தநிலையில் ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்தில் மாநில அரசு மீது அதிருப்தியை தெரிவித்துவருகிறது.
இதனிடையே பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைதாகி கடந்த 21ஆம் தேதி தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் புழல் சிறையில் இருந்து கருக்கா வினோத் வெளிவந்ததால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த நபர்கள் யார்? அவரது பின்புலம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என . தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த நபர்கள் யார்..? என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை.