பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்ததில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்.

by Staff / 19-04-2022 01:46:49pm
பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்ததில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்.

சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள, தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் தீக்ஷித். மாணவனின் தாய் தந்தை இருவரும் ஐடி துறையில் பணிபுரிபவர். கடந்த மாதம் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனம் மோதியதில் தீக்ஷித் உயிரிழந்தார்.

பள்ளி கல்வித்துறை பரிந்துரையின் பேரில், தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது பள்ளி முதல்வர் உட்பட மூவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

 

Tags :

Share via