மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அமைச்சர் பொன்முடி

by Staff / 19-04-2022 02:45:36pm
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அமைச்சர் பொன்முடி

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் பொருட்டு தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி தற்போதைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்வது இல்லை என குறிப்பிட்டார். மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் நான் முதல் முதல் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக விளக்கம் அளித்து. அமைச்சர் இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் பிஎச்டி படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via