பாரத்கேஸ் டேங்கர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து, தூத்துக்குடி நோக்கி பாரத்கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது. நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் நம்பியாற்று பாலத்தின் அருகே ஓட்டுனர் பால கிருஷ்ணன் தூக்கக்கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்த நிலையில் நம்பி ஆற்றுப்பாலத் தடுப்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு அதிகாலை 4 மணியளவில் குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் லாரியில் முழு கொள்ளளவு இருப்பதால் பொதுமக்கள் யாரையும் அருகே அனுமதிக்காமல் போலீசா திருப்பி அனுப்பி வருகின்றனர்
Tags :