வங்காளதேசத்தில் கனமழைக்கு 25 பேர் பலி; 40 லட்சம் பேர் பாதிப்பு

by Editor / 20-06-2022 04:31:46pm
வங்காளதேசத்தில் கனமழைக்கு 25 பேர் பலி; 40 லட்சம் பேர் பாதிப்பு


வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.இதன்காரணமாக அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. வங்காளதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்றபோதிலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

 

Tags :

Share via