திரௌபதி முர்மு ஜி நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார்- பிரதமா் நரேந்திரமோடி ட்விட்டா் வாழ்த்து

by Writer / 22-06-2022 08:56:25am
 திரௌபதி முர்மு ஜி நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார்- பிரதமா் நரேந்திரமோடி ட்விட்டா் வாழ்த்து
ஸ்ரீமதி .திரெளபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வற்கும் ,ஏழைகள்,தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்பணித்துள்ளார்.அவர் நிர்வாக அனுபவம் மற்றும் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர்.அவர் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று  நான் நம்புகிறேன். மில்லியன் கணக்கான மக்கள் ,குறிப்பாக வறுமையை அனுபவித்தவர்கள் மற்றும் கஷ்டங்களை எதிர் கொண்டவர்கள், ஸ்ரீ மதியின் வாழ்க்கையிலிருந்து பெரும் வலிமையைப் பெறுகிறார்கள்.துருபதி முர்மு ஜி.கொள்கை விஷயங்களைப்பற்றிய அவரது புரிதலும் இரக்க குணமும் நம் நாட்டிற்கு பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தம் ட்விட்டர் பதிவில் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via