மனைவி கண்முன்னே கத்தி முனையில் நாம் கட்சி பிரமுகர் கடத்தல்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை அடுத்த முனியன்கொட்டாயைச் சேர்ந்தவர் சிவசம்பு. இவர் மளிகை பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி பிரியாவுடன் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அவதானப்பட் சிறுவர் பூங்கா அருகில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் காரில் வந்த ஒரு கும்பல் சிவசம்புவை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றது. சிவசம்புவின் மனைவி பிரியாவிற்கு போன் செய்து ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியது. இதுகுறித்து பிரியா, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, கடத்தப்பட்ட சிவசம்புவை மீட்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.அதன்பேரில், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில், சிவசம்புவை தேடி வந்தனர். அவரது செல்போன் லொகோஷனை வைத்து எங்கிருக்கிறார் என்று ஆராய்ந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஒப்பதவாடி அருகே உள்ள லட்சுமிபரம் பக்கமாக இருப்பது தெரியவந்தது.
போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல்காரர்கள் சிவசம்புவின் கண்ணை கட்டிவிட்டு, அவரை சாலையோரமாக இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். அவரை மீட்ட போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் திருப்பத்தூர் ஜெகதேவி பகுதியை சேர்ந்த நபர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சிவசம்புவை கடத்தி பணம் கேட்டு கடத்தியதாக கந்திலி அருகே உள்ள எஸ்.மோட்டூரை சேரந்த பழனி, முருகன் வட்டத்தைச் சேர்ந்த குமரவேல், பர்கூர் ஜெகதேவியைச் சேர்ந்த விக்ரம், புதுபூங்குளம் மணி என்கிற மணிகண்டன், மணி மற்றும் முரளி ஆகிய 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை போலீசாரி தேடி வருகின்றார்கள். கைதான நபர்களிடம் கடத்தலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :