பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் கடும் நடவடிக்கை

by Admin / 17-07-2022 08:20:03pm
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால் கடும் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி  பள்ளி கலவரத்தை  அடுத்து  தனியார்  பள்ளிகள்  நாளை முதல்  இயங்காது என்று தனியார்  பள்ளி  கூட்டமைப்பு  சார்பாக விடப்பட்ட  அறிக்கைக்கு  தமிழ் நாடு மெட்ரிக்கேஷன் பள்ளிகள்  இயக்குனரகம்  கடும்எச்சரிக்கை  விடுத்துள்ளது . தனியார்  பள்ளிகள் நாளை அனுமதியின்றி  பள்ளிகளுக்களுக்கு விடுமுறை அளித்தால்   உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரிக்கை  விடுத்துள்ளது .உள்ளுர்  விடுமுறை  அளிப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மீறி]விடுமுறை விட்டால் சட்டப்படி நடவடிக்கை  என்று  எச்சரிக்கை  விடுத்துள்ளது.
 

Tags :

Share via